Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

20 September 2022

கிராம சபையில் தலைமை ஆசிரியர்கள்



காந்தி பிறந்த நாளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மாநிலம் முழுதும் நடக்கும் கிராமசபை கூட்டங்களில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது.அக்கூட்டத்தில், கிராமத்தின் வளர்ச்சி, அதற்கு அரசு பள்ளி அளிக்க வேண்டிய பங்களிப்பு, தரமான கல்வி குறித்து, ஆலோசனைகளை கூற வேண்டும்.மேலும், பள்ளியின் கட்டமைப்புக்கு, கிராம பஞ்சாயத்து மற்றும் மக்களின் ஒத்துழைப்பு தேவை குறித்து பேச வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES