Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 December 2021

பள்ளிகளுக்கு கிடைத்த விருது; சாதித்து காட்டிய மாணவிகள்!

அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ள புதிய பெருமை திருவாரூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பூண்டி.கே.கலைவாணன் பாராட்டு!

கடந்த 2019-20 ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருது தமிழக அரசால் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட செருவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை பெற்ற வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பாராட்டி பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.

அதனைதொடர்ந்து, ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கமும் இணைந்து 2021-2022ம் ஆண்டிற்கான மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டி கடந்த நவம்பர் 16,17, மற்றும் 18ம் தேதிகளில் சேலத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்துகொண்டு மன்னார்குடி, சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி அமிர்தவர்ஷினி தவில் இசையில் மாநில அளவில் முதலிடமும், திருத்துறைப்பூண்டி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி தொல்காப்பியா பரதநாட்டிய கலையில் மாநில அளவில் முதலிடமும் பெற்று விருதினை பெற்றுள்ளனர்.

இவ்விருதினை பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். மேன்மேலும், பல்வேறு சாதனைகளை படைக்குமாறு விருது பெற்ற மாணவிகளை வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES