Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 December 2021

ஆசிரியரை தாக்கிய நிகழ்வு

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளியில்  நேற்று (1/12/2021)  வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆங்கில முதுகலை ஆசிரியரை, மாணவர்கள் முன்னால் +1 படிக்கும் மாணவன்  இரண்டு முறை கன்னத்தில் அறைந்துள்ளான்.

இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாள் ஆகியும் இதுவரை ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும், கல்வித் துறை அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்

மாணவர்களின் செயல்களை கட்டுப்படுத்த எந்தவித வரையறையும் இல்லாத சூழலில் அரசுப் பள்ளிகள் செயல்படுவதால் இது போன்ற விரும்பத்தகாத செயல்களை மாணவர்கள் துணிவுடன் செய்கிறார்கள்.

இந்த நிகழ்வு இதுவரை அதிகம் கேள்விப்படாத செயலாக இருக்கிறது.

 இது  மேலும் தொடராத வண்ணம் கடுமையான சட்டத்தின் கீழ் அந்த மாணவர் மீது வழக்குத் தொடுத்தது தண்டனை பெற்று தர வேண்டும்.

மாணவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் தலைமையாசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்

மாணவனால் தாக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முதுகலை ஆங்கில ஆசிரியைக்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES