Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 November 2021

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்:- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பகுதி நேரம் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நிரந்தரமாக்க படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்தேர்வு களுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய 8 பாடங்களை பகுதிநேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். 

இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் மாத சம்பளம் 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் வெளியேறினர். தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. இவர்களுக்கு அரசு ஊழியர்கள் பெறும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பணி நிரந்தரம் ஆகாமலே பலரும் ஓய்வு பெற்றுவிட்டனர்

எனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்களின் பயம் போக்கும் வகையில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆங்கில வழி பாடப்பிரிவுகளை அதிகரிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன. எனவே மழை பாதிப்பில்லாத மாவட்டங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை முடித்து தயார் நிலையில் இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES