Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 August 2021

புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்ட நன்மைகள் என்ன

புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்ட நன்மைகள் என்ன என்பதை நாம் அறிவது அவசியமாகும்

1) ஓய்வூதியம்(pension)

2) குடும்ப ஓய்வூதியம்( Family pension)

3) பணிக்கொடை(DCRG Death cum Retirement Gratuity)

4) ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பகுதியை தொகுத்து பெறுதல்(Commutation)

5) வருங்கால வைப்பு நிதி(General Provident fund).

இதில் ஓய்வூதியம் இறுதியாகக் கிடைத்த ஊதியத்தில் ஐம்பது சதவீதம் ஆகும் ( முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தவருக்கு)

குடும்ப ஓய்வூதியம் மனைவி/ கணவன் இறக்கும்வரை வழங்கப்படும்.. மேலும் மகன்/ மகள் 25 வயது வரை அல்லது திருமணமாகும் வரை..அதே வேளையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்/ ஆசிரியருக்கு மனநிலை குன்றிய குழந்தை இருந்தால் அக்குழந்தையின் ஆயுட்காலம் வரை குடும்ப ஓய்வூதியம் தொடரும்...இத்தகைய *குடும்ப ஓய்வூதியம் இந்தியாவில் 1.1.964 முதல் அமுலில் உள்ளது

பணிக்கொடையை பொறுத்தவரை 33 ஆண்டுகள் பணிபுரியும் ஒருவருக்கு முழு பணிக்கொடை வழங்கப்படும்..இது அதிகபட்சம் 20 இலட்சம் வரை என வரையறை செய்யப்பட்டுள்ளது..

பொதுவருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயரால் பராமரிக்கப்பட்டு வருகிறது...

இது மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதம் பிடிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது..

இதில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை திரும்பச் செலுத்தும் கடன் பெறலாம் இந்த ஆறு மாதக்கணக்கினை நினைவில் வைத்திருந்து ஆண்டுக்கு இரண்டு முறை கடன் வாங்கி தனது குழந்தைகளின் கல்வி, வீட்டு உபயோகப் பொருட்கள், சில்லறை செலவுகள், காது குத்துதல், மொட்டை போடுதல் என ஏராளமான விசயங்களை நிறைவேற்றியவர்கள் ஏராளம்...

பதினைந்து ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பகுதித்தொகையை பெறலாம்..

அதனை திரும்பச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.. 2000 முதல் 2010 ம் ஆண்டு வரை இத்தொகையை பெற்று வீட்டு மனை வீடு கட்டுதல் பணி மேற்கொ ண்ட அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் எண்ணிக்கை என்பது 90 சதவீதம் வரை இருக்கும்

இன்றைக்கும் 1990 களில் ஒரு இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் நிலையில் பணியேற்று முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர் குறைந்தபட்சம் 14/15 இலட்சம் பணிக்கொடையும் அதே போல் 14/15 இலட்சம் கம்முடேசனும் ஆக மொத்தம் 28/30 இலட்சம் ஓய்வின் போது பெறுவர்....

இந்த வாய்ப்பு என்பது முற்றிலுமாக புதிய பென்சன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது

புதிய பென்ஷனில் என்ன இருக்கிறது

பழைய பென்சன் திட்டத்தின் பலன்களை நாம் அறிவோம்...

புதிய பென்சன் திட்டம் என்பது பெரியார் சொன்னது போல் ஓர் வெங்காயத்திட்டமே

உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது...

அதிலும் தமிழகத்தில் உள்ள புதிய பென்சன் திட்டம் என்பது ஓர் அழுகிய வெங்காயம் போன்றது தான்....

ஏனெனில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள எந்த நடைமுறையும் தமிழகத்தில் கடைப்பிக்கப்படவில்லை...

எந்த முதலீட்டு திட்டத்திலும் இது முதலீடு செய்யப்படவில்லை

அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

தனிநபர் பங்குத் தொகையும் அரசு பங்குத் தொகையும் இணைத்து ஜிபிஎப்க்கு வழங்கப்படும் வட்டித்தொகை கணக்கிடப்பட்டு ஒட்டுமொத்தமாக வழங்கும் நடைமுறை தான் இதுநாள் வரை நடைமுறையில் உள்ளது...

புதிய பென்சன் திட்டம் ஏன் வெங்காயத்திட்டம் எனப்படுகிறது என்றால்.... புதிய பென்சன் திட்டத்தில் ( மத்திய அரசு திட்டம்) சேமிக்கப்படும் தொகை ஆண்டுதோறும் நிதி மேலாளர்கள் மூலம் லாபம் தரும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும்...

ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையில் அறுபது சதவீதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு நாற்பது சதவீதம் மீண்டும் முதலீடு செய்யப்படும் அதிலிருந்து வரும் வருமானத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்...




இத்தகைய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..




அவ்வாறாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டால் அதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும்...

புதிய பென்சன் திட்டத்தை ஏன் முதலாளிகளும் கார்பரேட்டுகளும் வரவேற்கின்றன..

இந்த திட்டம் மூலம் அவர்களுக்கு தேவையான நிதி மூலதனம் கிடைக்கும்.

.அதை வைத்து தொழில் செய்யலாம்.

.இலாபத்தில கொழிக்கலாம் நஷ்டம் வந்தால் கம்பெனியை மூடி விட்டு சென்று விட்டால் அரசு ஊழியர் கதி அதோ கதி தான்...

*தொழிலாளர் வைப்பு நிதி (Employees provident fund) எம்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் என்று சொல்லக்கூடிய நிதித்தொகுப்பில் ஏப்ரல் 2017 நிலையில் 40865 கோடி ரூபாய் திரும்பப்பெறப்படாத தொகையாக உள்ளது.. இதன் மூலம் ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய் வட்டியாக மட்டும் கிடைக்கிறது.

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 30.7.2016 நிலையில் இந்தியா முழுவதும் 1,31,38,805 பேர் இணைந்து உள்ளனர்.. இதன் மூலம் சேர்ந்த தொகை 1,38,935 கோடியாகும்...(ஆதாரம் கானலான ஓய்வூதியம் பிரடெரிக் ஏங்கெல்ஸ் 2016)‌

இந்த தொகையை கபளீகரம் செய்து முதலாளிகளை நோக்கி மடைமாற்றம் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடே புதிய பென்சன் திட்டம்...

அதற்கு முன்னுதாரணம் தான் தமிழக அரசு நடத்தும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருந்துவ காப்பீடு திட்டம்ஆகும்.

இத்திட்டத்திற்கு மாதந்தோறும் 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது... இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கேஷ்லஸ் ட்ரீட்மெண்ட் கட்டணமில்லா சிகிச்சை ஆனால் அரசு ஊழியர் அட்டை அல்லது மருத்துவ காப்பீடு அடையாள அட்டை காட்டியதும் முன்பணம் கட்டச்சொல்லாத மருத்துவமனைகளை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம்....

அதுதான் இன்றைய நிலை..

எல்லா மாவட்ட வட்டக்கிளை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளின் அன்றாட நிகழ்வு இதற்கு பஞ்சாயத்து செய்வதும் கருவூலத்துறை கமிஷனரிடம் செல்பேசியில் பேசுவதும் தான்....

ஆகவே புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து களம் காண வேண்டிய அவசர அவசியம் உள்ளது தோழர்களே , இளைஞர்களே.

புதிய ஓய்வூதிய திட்ட செயல்பாட்டு வடிவமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம்(PFRDA) உருவாக்கப் பட்டது..

அதனோடு இணைந்து கீழ் கண்ட அமைப்புகளும் நிதி மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டது

1)NPS trust

2) Trustee Bank

3) Central Record Agency

4) Fund Managers

1) அறங்காவலர் குழு ஓய்வூதிய நிர்வாகம் செய்வதற்கும், பராமரிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கும் உருவாக்கப்பட்டது... இக்குழுவின் இயக்குனர்கள் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடிய திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து, இயக்கிடும் வேலையைச் செய்கிறது...

2) அறங்காவலர் வங்கி இதன் முதன்மை நோக்கம் சந்தாதாரர்கள் நிதியை முறையாகக் கையாளுதல் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதுமாகும்...இப்பணியினை முதலில் பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி சில காலமும் அதன் பின்னர் தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் செய்து வருகின்றன.

3) மத்திய கணக்கு பதிவு முகமை

இந்திய கணக்கு பதிவு முகமை ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கும் தனித்தனியான தனித்துவம் வாய்ந்த கணக்கு எண் வழங்கி தனிநபர் கணக்கினை பராமரித்து வரும்.இது நிதி மேலாளர்கள் மற்றும் அறங்காவலர் வங்கி ஆகியவற்றை இணைக்கும் சங்கிலியால் செயல்படும்.

4) நிதி மேலாளர்கள்

அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிதியினை பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும் பணியினை நிதி மேலாளர்கள் செய்வர்.. இந்தியாவில்

SBI pension fund Pvt.ltd.

UTI retirement Solutions LIC pension fund Pvt

ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது..

புதிய ஓய்வூதியம் சேவை அமைப்புகள்

ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் அவரின் மொத்த தொகையில் அறுபது சதவீதம் ரொக்கமாக வழங்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 40 சதவீதத்தை முதலீடு செய்து ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு இந்த சேவை அமைப்புகளின் வேலை ஆகும் (Annuity Service Provider).. இந்த சேவையை எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களும் ஐசிஐசிஐ, பஜாஜ், ரிலையன்ஸ், எச்டிஎப்சிஏ, ஸ்டார் யூனியன் போன்ற தனியார் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.. எந்த நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம் என்று பிஎஃப்ஆர்டிஏ முடிவு செய்யும்...

நிதி முதலீட்டு திட்டங்கள்

புதிய ஓய்வூதியம் சேவை அமைப்புகள்

ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் அவரின் மொத்த தொகையில் அறுபது சதவீதம் ரொக்கமாக வழங்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 40 சதவீதத்தை முதலீடு செய்து ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு இந்த சேவை அமைப்புகளின் வேலை ஆகும் (Annuity Service Provider).. இந்த சேவையை எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களும் ஐசிஐசிஐ, பஜாஜ், ரிலையன்ஸ், எச்டிஎப்சிஏ, ஸ்டார் யூனியன் போன்ற தனியார் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.. எந்த நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம் என்று பிஎஃப்ஆர்டிஏ முடிவு செய்யும்...

நிதி முதலீட்டு திட்டங்கள்

பல்வேறு முதலீட்டு திட்டங்கள் அரசு ஊழியர்/ சந்தாதாரர் வயதைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது..

இவை திட்டம் இ, திட்டம் சி, திட்டம் ஜி என்றழைக்கப்படும்.. அரசு நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு ஜி எனப்படும்... தனியார் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு சி எனப்படும், அதிக ஆபத்துக்கள் உள்ள பங்குச்சந்தையில் முதலீடு செய்வது இ எனப்படும் ( முதலீடு செய்பவன் இளிச்சவாயன் என்றும் பொருள் கொள்ளலாம்) equity market with high risk. இந்த மூன்று பிரிவுகளில் இ+ சி+ ஜி :50+30+20 என்று முதலீடு செய்யப்படும்...

ஊழியர் விருப்பம் தெரிவிக்காத நிலையில் வயது அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படும்.

18--35 வரை இ+சி+ ஜி 50+30+20 என்றும் , 55 வயதாகும் போது இ+சி+ஜி: 10+10+80 என முதலீடு செய்யப்படும்....

பொருந்தாது

இந்த முதலீடு திட்டம் எதுவும் தமிழகத்திற்கு பொருந்தாது ஏனெனில் நாம் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு பிஎப்ஆர்டிஏ வில் இதுவரை இணையவில்லை....

பராமரிப்புச் செலவினங்கள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சந்தாதாரர்களிடம் நுழைவுத் கட்டணம், பராமரிப்புக்கட்டணம், பரிமாற்றக்கட்டணம் என பல்வேறு பராமரிப்பு செலவுக்கட்டணங்கள் பிஎஃப்ஆர்டி ஒப்புதலுடன் பிடித்தம் செய்யப்படும்...

ஊழியர் ஓய்வு பெற்றால் மொத்த முதலீட்டில் அறுபது சதவீதம் ரொக்கமாக வழங்கப்பட்ட நிலையில் விருப்ப ஓய்வில் சென்றால் இருபது சதவீதம் மட்டுமே ரொக்கமாக வழங்கப்படும் எண்பது சதவீதம் முதலீடு செய்யப்படும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது...

திரும்பப் பெறுதல்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர்கள் பத்தாண்டு பணி முடித்தபின் தனது மொத்த பங்கு தொகையில் 25சதவீதம் பெறலாம்.. ஐந்தாண்டு இடைவெளியில் ஒருவர் பணிக்காலத்தில் மூன்று முறை தனது பங்குத்தொகையை திரும்பப் பெற முடியும்..

காரணம்

குழந்தைகள் உயர் கல்வி, வீடுகட்டுதல் மற்றும் ஒரு சில மருத்துவ செலவுகளுக்கு இத்தொகையை 10,15,20 ஆண்டுகள் என்ற கணக்கில் தனது பங்களிப்பில் இருபத்தைந்து சதவீதம் பெறலாம்.

ஓய்வூதியம் குறித்து எந்த உத்திரவாதமும் தரப்படவில்லை..

இவ்வாறான பல கட்டுப்பாடுகளையுடைய இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு எந்த அளவு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உத்திரவாதம் ஏதுமில்லை.அதே போல் எந்தளவு முதலீடு செய்தால் எந்த அளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்று வரையறுத்துக் கொடுக்கப்படவில்லை...அடல் பென்ஷன் திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தில் மாதம்1000 ரூபாய் முதல் 5000 வரை இருந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் அறுபது வயது முடிந்த பின்னர் மாதந்தோறும் அதே அளவு ஓய்வூதியம் இறக்கும் வரை வழங்கப்படும் என்ற உத்திரவாதம் வழங்கப்படுகிறது..இத்திட்டத்தில்2016 ஜனவரி மாதம் முடிய 19.77 இலட்சம் சந்தாதாரர்கள் இணைந்து 328 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது ( ஆதாரம்: எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஜூலை 8,2017, vol L11 no27).

அது போன்ற ஒரு உத்திரவாதம் ஏதும் புதிய பென்சன் திட்டத்தில் இல்லை என்பதும் , இதனை மத்திய, மாநில அரசுகள் பெரும் முதலாளிகள் பயனடைவதற்காக துவங்கியுள்ளது என்பது தான் உண்மை..

எனவே இத்தகைய நாசகரமான ஏமாற்று திட்டத்தை எதிர்த்து களம் காண வேண்டிய அவசியம் உள்ளது....அதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை CPS ஒழிப்பு இயக்கம் நடத்தி வருகின்றன..


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES