சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம்,நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஜூலை 17) கனமழை பெய்யும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிமற்றும் தென்மேற்கு பருவக்காற்றுகாரணமாக 17-ம் தேதி நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 18-ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கன மழையும், இதர மாவட்டங்கள்மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழையும் பெய்யக்கூடும்.
19, 20-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE