Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 September 2022

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்: அமைச்சர் மறுப்பு

தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் 'ப்ளு' காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இந்த காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் பதில் அளித்து, சென்னையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வே ண்டிய அவசியம் இல்லை.

 நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்ககைளை வெளியிட வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடை பெற்று வருகிறது. செப்டம்பர் 30ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES