Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2022

தமிழகத்தில் பள்ளிகள் வேலை நேரத்தில் மாற்றம்

PLAY VIDEO


தமிழகத்தில் பள்ளிகள் வேலை நேரத்தில் மாற்றம் தமிழகத்தில் தற்போது ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களை பொறுத்தவரையில் காலை 4.30 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகிறது.

அதே போல் நகர்புறங்களில் காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கி மாலை 3.45- க்கு முடிவடைகிறது. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகளிலும் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என இன்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் போது இந்த சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதால் பள்ளி வேலை நேரம் மற்றும் முடிய நேரம் மாற்றப்பட இருப்பதாக பள்ளிகல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனிடையே மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்க இருப்பதால் சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றனர். இதனால் அதற்கு ஏற்பட்ப பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES