Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 March 2022

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்


ஒரு ராசிகட்டத்தில்‌ அதிக நாட்கள்‌ இருக்கும்‌ சனி, ராகு-கேது, குரு ஆகியவற்றின்‌ பெயர்ச்சிகள்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரியன்‌-சந்திரன்‌ சுற்றுப்‌ பாதையில்‌ அவை சந்திக்கும்‌ இரு புள்ளிகளைத்தான்‌ ராகு-கேது என்கிறோம்‌. இங்கு கோச்சார படி, ஜோதிடர் - காழியூர் நாராயணன் கன்னி ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் விளக்கியுள்ளார்

கன்னி ராசி அன்பர்களே!
 

கேது தற்போது 3-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ உள்ளார்‌. இது சிறப்பான இடம்‌. அங்கு அவர்‌ இறை அருளையும்‌, பொருள்‌ உதவியையும்‌ கொடுப்பார்‌. மேலும்‌ உடல்‌ உபாதைகளை குணமாக்குவார்‌. மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று கேது 2-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருகிறார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. இனி அவரால்‌ நன்மை தர இயலாது. அரசு வகையில்‌ அனுகூலமான போக்கு இருக்காது. அரசின்‌ வகையில்‌ சிக்கல்‌ வரலாம்‌. கேது சாதகமற்ற இடத்தில்‌ இருக்கிறார்‌ என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு11-இடமான கடகத்தில்‌ விழுகிறது.இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்‌ மூலம்‌ காரிய அனுகூலம்‌ ஏற்படும்‌. குடும்பத்தில்‌ மகிழ்ச்சி அதிகரிக்கும்‌.

ராகு தற்போது 9-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. காரியத்தில்‌ சிற்சில தடைகளை உருவாக்கலாம்‌. எதிரிகளின்‌ இடையூறு தலைதூக்கும்‌. பிறருக்கு கட்டுப்பட்டு போகும்‌ நிலை உருவாகும்‌. இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம்‌ அவரது 4,7 மற்றும்‌11-ம்‌ இடத்துப்‌ பின்னோக்கிய பார்வைகள்‌ சாதகமாக உள்ளன. இதன்‌ மூலம்‌ எந்த பிரச்சனையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 8-ம்‌ இடமான மேஷத்திற்கு மாறுகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. அவர்‌ உறவினர்கள்‌ வகையில்‌ சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம்‌. சிலர்‌ ஊர்விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌



உங்கள்‌ முயற்சிகளில்‌ தடைகளையும்‌ உருவாக்கலாம்‌. ஆனால்‌ உங்கள்‌ திறமையில்‌ இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில்‌ கேது 3-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருந்து நன்மைகள்‌ தந்து கொண்டிருக்கிறார்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும்‌ கவலை கொள்ள தேவை இல்லை. காரணம்‌ குருபகவான்‌ ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி சாதகமான இடத்திற்கு வந்து நற்பலனை தருவார்‌.

குருபகவான்‌ உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌. பொதுவாக 6-ம்‌ இடத்தில்‌ இருக்கும்‌ குரு மனதில்‌ தளர்ச்சியை ஏற்படுத்துவார்‌. ஆனாலும்‌ அதற்காக கவலை கொள்ள வேண்டாம்‌. குரு சாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 9-ம்‌ இடத்துப்பார்வை மிகவும்‌ சாதகமாக காணப்‌படுகிறது. குருவின்‌ பார்வை மூலம்‌ துணிச்சல்‌ பிறக்கும்‌. பணவரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌. பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. மேலும்‌ அவர்‌ ஏப்ரல்‌14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 7-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. அவர்‌ மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்‌. செல்வாக்கு மேம்படும்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌. எண்ணற்ற பல வசதிகள்‌ கிடைக்கும்‌. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்‌.

மேலும்‌ அப்போது அவரது 5-ம்‌ இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலமும்‌ நற்பலன்‌ கிடைக்க பெறுவீர்கள்‌. தற்போது சனிபகவான்‌ 5-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌. இது அவ்வளவு சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. அவர்‌ குடும்பத்தில்‌ சிற்சில பிரச்சினைகளை தருவார்‌. குழப்பத்தை உருவாக்கலாம்‌. மனதில்‌ ஏனோ இனம்‌ புரியாத வேதனை குடிகொள்ளலாம்‌. அவர்‌ திருப்தியற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 7-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக உள்ளன. இதனால்‌ நன்மைகள்‌ கிடைக்கும்‌. மேலும்‌ சனிபகவான்‌ மே 21-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. இந்த காலத்தில்‌ அவர்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌.

வக்கிரத்தில்‌ சிக்கும்‌ கிரகத்தால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சனிபகவான்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது கெடுபலன்களை தரமாட்டார்‌. 2023 மார்ச்‌ 29-ந்‌ தேதி சனிபகவான்‌ அன்று 6-ம்‌ இடமான கும்பத்திற்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. மேலும்‌ அவரது10-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக அமைந்து உள்ளது.

இனி விரிவான பலனை காணலாம்‌

ராகுவால்‌ சிறுசிறு தடைகள்‌ வரலாம்‌. அதேநேரம்‌ குருவால்‌ இவைகளை ஈடுகட்டும்‌ வகையில்‌ துணிச்சல்‌ பிறக்கும்‌. பண வரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகள்‌ கைகூடும்‌. தனியார்‌ துறையில்‌ வேலை பார்ப்பவர்களுக்கு மேல்‌ அதிகாரிகளின்‌ ஆதரவு கிடைக்கும்‌. பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்கள்‌ வேலையில்‌ கவனமாக இருக்கவும்‌. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு வக்கீல்களுக்கு தாங்கள்‌ நடத்தும்‌ வழக்குகளில்‌ சாதகமான தீர்ப்பு கிடைக்கும்‌.

வியாபாரத்தில்‌ நம்பிக்கையுள்ள நண்பர்கள்‌, பெரியோர்கள்‌ ஆலோசனையுடன்‌ முன்னேற்றம்‌ காணலாம்‌. அலைச்சல்‌ அதிகரிக்கும்‌. அரசு வகையில்‌ அனுகூலமான போக்கு காணப்‌ படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக்‌ கொள்ளவும்‌. அச்சகம்‌, பத்திரிகை, பப்ளிகேசன்‌, கட்டுமான ஆலோசகர்‌ போன்ற தொழில்‌ நல்ல வளர்ச்சியை அடையும்‌.

பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. பங்கு வர்த்தகம்‌ நல்ல லாபத்தைத்‌ தரும்‌. தங்கம்‌, வெள்ளி, வைர நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தைப்‌ பெறுவர்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌. எதிரிகளால்‌ இருந்து வந்த முட்டுக்கட்டைகள்‌ விலகும்‌. பணப்‌ புழக்கம்‌ அதிகரிக்கும்‌. வீண்விரயம்‌ குறையும்‌. புதிய தொழில்‌ வளர்ச்சி அடையும்‌. லாபம்‌ சிறப்பாக இருக்கும்‌.

கலைஞர்கள்‌: 

முயற்சிகளில்‌ இருந்த தடையும்‌, மனதில்‌ ஏ ஏற்பட்ட சோர்வும்‌ மறையும்‌. புதிய ஒப்பந்தங்‌கள்‌ கிடைக்கும்‌. சமூகநல சேவகர்‌ எதிர்பார்த்த புகழ்‌ பாராட்டு வந்து சேரும்‌. அரசியல்வாதிகள்‌ சிறப்பு அடைவர்‌.

மாணவர்களுக்கு 

ஆசிரியர்களின்‌ அறிவுரை கிடைக்கும்‌. ஸ்காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌.

விவசாயிகள்‌: 

அதிகமாக உழைக்க வேண்டும்‌. மஞ்சள்‌, பயறு வகைகள்‌, பழவகைகள்‌ மூலம்‌ நல்ல வருவாய்‌ காணலாம்‌. கால்நடை செல்வம்‌ பெருகும்‌. பசுவளர்ப்பு மூலம்‌ வருமானம்‌ காணலாம்‌.

பெண்களுக்கு 

சகோதரிகளால்‌ பண உதவி கிடைக்கும்‌. சுபநிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வீர்கள்‌. உங்களை புரிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. திருமணம்‌ ஆகாமல்‌ இருக்கும்‌ பெண்களுக்கு திருமணம்‌ கைகூடும்‌ அதுவும்‌ நல்ல வரனாக அமையும்‌. சிலரது வீட்டில்‌ பொருட்கள்‌ திருட்டு போகலாம்‌. கவனம்‌ தேவை. கண்‌ தொடர்பான உபாதைகள்‌ வரலாம்‌.

பரிகாரம்‌- 

சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம்‌ ஏற்றுங்கள்‌. ராகு காலத்தின்‌ பைரவருக்கு புஜை செய்யலாம்‌. நாக தேவதையை வணங்கி வாருங்கள்‌. ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கன்‌. ஏழைகளுக்கு உளுந்து தானம்‌ செய்யுங்கள்‌. ஏப்ரல்‌ 13-ந்‌ தேதி வரை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்‌. சிவாலயம்‌ சென்று தட்சிணாமூர்த்தியைவணங்கி வாருங்கள்‌.












No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES