Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 March 2022

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள

ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்


மீன ராசி அன்பர்களே ! 

ராகு 3-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌. அவர்‌ காரிய அனுகூலத்தையும்‌, பொருளாதார வளத்தையும்‌, குடும்பத்தில்‌ மகிழ்ச்சியையும்‌, தொழில்‌ விருத்தியையும்‌ தருவார்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 2-ம்‌ இடமான மேஷத்திற்கு வருகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. இங்கு அவர்‌ குடும்பத்தில்‌ சிற்சில பிரச்சனையையும்‌, தூரதேச பயணத்தையும்‌ ஏற்படுத்துவார்‌. பொருட்‌களை களவு கொடுக்க நேரிடும்‌. பொருளாதார இழப்பு ஏற்படும்‌. ஆனால்‌ ராகுவின்‌ பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடமான மகரத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌.

கேது தற்போது 9-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ உள்ளார்‌. அங்கு அவர்‌ நன்மை தரமாட்டார்‌. அவரால்‌ முயற்சிகளில்‌ தோல்வி ஏற்படும்‌. பொருள்‌ நஷ்டம்‌ வரலாம்‌. உடல்‌ ஆரோக்கியம்‌ குறையலாம்‌. அதற்காக கவலை கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ அவரது பின்னோக்கிய 4,7, 11-ம்‌ இடத்துப்‌ பார்வைகள்‌ சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினை -யையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்‌.

இதன்மூலம்‌ தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌. நகை ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று கேது 8-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. இங்கு கேதுவால்‌ விபத்து பயம்‌, செயல் முடக்கம்‌, உடல்‌ நலக்‌ குறைவு முதலியன வரலாம்‌. சனி ராகு ஆகிய கிரகங்கள்‌ சாதகமான நிலையில்‌ மலர்கிறது. இதனால்‌ இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்‌. சனிபகவான்‌ இப்போது உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌. இது சாகதமான இடம்‌. பல்வேறு நன்மைகளை தருவார்‌. அவரால்‌ பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌.பெண்களால்‌ முன்னேற்றம்‌ காணலாம்‌. உங்களுக்கு இது மிகவும்‌ சிறப்பான காலம்‌.

உங்கள்‌ வாழ்க்கை செழித்தோங்கும்‌. ஆனால்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை சனி வக்கிரத்தில்‌ உள்ளார்‌. சனி பகவான்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும்‌ மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌. இந்த காலக்கட்டத்தில்‌ சனியின்‌ பலம்‌ சற்று குறையும்‌. குருபகவான்‌ தற்போது உங்கள்‌ ராசிக்கு 12-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ இருக்கிறார்‌.

இங்கு அவரால்‌ பொருள்‌ விரயம்‌ ஏற்படும்‌. பல்வேறு தொல்லைகள்‌ உருவாகும்‌. மனதில்‌ வருத்தம்‌ உருவாகும்‌. வீண்‌ அலைச்சல்‌ ஏற்படும்‌. இதனால்‌ நீங்கள்‌ மனம்‌ ஒடிந்துபோய்விட வேண்டாம்‌. குருபகவான்‌ கெடுபலனை செய்யும்‌ போது அது உங்களுக்கு இறுதியில்‌ நன்மையிலேயே முடியும்‌. அவர்‌ ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி பெயர்ச்சி அடைந்து உங்கள்‌ ராசிக்கு மாறுகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ குடும்பத்தில்‌ சிற்சில பிரச்சினை வரலாம்‌. வேலையில்‌ இடமாற்றம்‌ வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும்‌.

சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம்‌ முதலியன ஏற்படலாம்‌. அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம்‌. அப்போது குருவின்‌ அனைத்து பார்வைகளும்‌ சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்‌.

இனி விரிவான பலனை காணலாம்‌

ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும்‌ குரு பார்வையால்‌ கணவன்‌- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்‌. பெண்களின்‌ ஆதரவு உண்டு. அவர்களால்‌ பொருள்‌ சேரும்‌. விருந்து விழா என சென்று வருவீர்கள்‌. குருபார்வையால்‌ உற்சாகம்‌ பிறக்கும்‌.நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌. குடும்பத்தில்‌ இருந்து வந்த பின்னடைவுகள்‌ மறையும்‌. பெண்கள்‌ மூலம்‌ மேன்மை கிடைக்கும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. இதனால்‌ வாழ்க்கையில்‌ வளம் காணலாம்‌. ராகுவின்‌ பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌ ஆனந்தமும்‌ இருக்கும்‌. சகோதரிகள்‌ உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌.

2023 ஏப்ரல்‌ மாதத்திற்கு பிறகு குருவால்‌ துணிச்சல்‌ பிறக்கும்‌. பண வரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌. உங்களை புரிந்து- கொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. உததியாகததில குரு பாவையால 6வலைப்பளு குறையும. செலவாககு மேமபடும. பணபபுழககம அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌. எண்ணற்ற பல வசதிகள்‌ கிடைக்கும்‌. மேல்‌ அதிகாரிகள்‌ அனு சரணையாக நடந்து கொள்வர்‌. சக ஊழியர்களின்‌ நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்‌. பாதுகாப்பு தொடர்‌பான வேலையில்‌ இருப்பவர்களுக்கு வேலையில்‌ பொறுமையும்‌ நிதானமும்‌ தேவை.

2023 ஏப்ரல்‌ மாதத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வுக்கு தடை ஏதும்‌ இல்லை. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம்‌ கிடைக்கலாம்‌. வியாபாரம்‌ பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. சிலர்‌ வியாபார விஷயமாக வெளிநாடுசென்று வருவீர்கள்‌. பங்குவர்த்தகம்‌ நல்லலாபத்தைத்‌ தரும்‌. எதிரிகளின்‌ இடையூறுகள்‌ வரலாம்‌. அவர்கள்‌ வகையில்‌ ஒருகண்‌ இருப்பது நல்லது. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனிபகவானின்‌ 7-ம்‌ இடத்து பார்வையால்‌ பல்வேறு நன்மைகளை தருவார்‌. முயற்சிகளில்‌ வெற்றியை தருவார்‌. உங்கள்‌ ஆற்றல்‌ மேம்பம்‌. பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. அவர்கள்‌ சரண்‌ அடையும்‌ நிலை ஏற்படும்‌.

கலைஞர்கள்‌ புதிய ஒப்பந்தங்கள்‌ கிடைக்கப்‌ பெற்று நல்ல வசதிகளையும்‌ பெற்று வாழ்வீர்கள்‌. பொதுநல சேவகர்களுக்கு நற்பெயர்‌ கிடைக்கும்‌. நல்ல அந்தஸ்தில்‌ இருப்பர்‌.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள்‌ 

ஆசிரியரிடம்‌ நற்பெயரை எடுப்பர்‌. ஆசிரியர்களின்‌ ஆலோசனை கிடைக்கும்‌. பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெறலாம்‌.

விவசாயத்தில்‌ கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்‌. எதிர்பார்த்த வருமானம்‌ கிடைக்கா விட்டாலும்‌ உழைப்புக்கு தகுந்த கூலி வரும்‌. வழக்கு வழக்கு விவகாரங்களில்‌ மெத்தனமாக இருக்க வேண்டாம்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு வக்கீல்‌களுக்கு தாங்கள்‌ நடத்தும்‌ வழக்குகள்‌ சிறப்பாக இருக்கும்‌. சாதகமான தீர்ப்பு கிடைக்கும்‌.

பெண்கள்‌

குதூகலமாக இருப்பர்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகள்‌ குருபார்வையால்‌ கைகூடும்‌. தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌. உறவினர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. உங்களை புரிந்துகொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சணடையும்‌ நிலை வரலாம்‌. அக்கம்‌ பக்கத்தினர்‌ அனுசரணையுடன்‌ இருப்பர்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்கள்‌ சிறப்பான பலனை பெறுவர்‌. பதவி உயர்வு காண்பர்‌. உடல்‌ நலம்‌ உஷ்ணம்‌, தோல்‌, தொடர்பான நோய்‌ வரலாம்‌.

பரிகாரம்‌

கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்‌: துர்க்கை வழிபாடு நடத்துங்கள்‌. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்‌. லங்குழு, திருச்செந்தரர்‌, இட்டக்குழு, பட்டமங்கலம்‌ போன்ற ஏகாவது ஒரு குருத்தலதீதிற்கு சென்று வாருங்கள்‌. குருபகவானுக்கு மஞ்சன்‌ நிற புக்களால் அர்ச்சனை செய்யுங்கள்‌. அப்போது கொண்டை கடலை படைத்து தானம்‌ செய்ய விசேஷம்.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES