Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 February 2022

தமிழகத்தில் பதிவான கொரோனா உச்சம் மற்றும் வீழ்ச்சி நிலைகள் - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இதுவரை பதிவான கொரோனா உச்ச நிலை மற்றும் வீழ்ச்சி நிலை குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் உச்ச நிலை மற்றும் வீழ்ச்சி நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதல் அலையில் 2020 மே 31 ஆம் தேதிக்குப் பிறகு தினசரி 1000 பேருக்கு தொற்று உறுதியானதாகவும், 2020 ஜூலை 27 ஆம் தேதி 6,993 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானதாகவும் கூறியுள்ளது.

அதே ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி 127 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாகவும், முதல் அலையில் அதிகபட்சமான உயிரிழப்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலையின் போது 2021 மே 21 ஆம் தேதி 36,184 பேருக்கு என ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2021 மே 30 ஆம் தேதி 493 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாகவும், இரண்டாம் அலையில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்சமான உயிரிழப்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் அலையில் 2021 டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு தினசரி 1000 பேருக்கு தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து 2022 ஜனவரி 22 ஆம் தேதி ஒரே நாளில் 30,744 பேருக்கு அதிகபட்சமாக தொற்று உறுதியானது. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு 1000-க்கும் கீழ் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES