Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 January 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?


பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்
தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏணைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES