Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 January 2022

ஒமைக்ரான்... தப்புவது எப்படி

உருமாறும் கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் இப்போது ஒமைக்ரான் என மிரட்டுகிறது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகம் எடுத்துள்ளதால் ஒமைக்ரான் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

* தென் ஆப்ரிக்காவில் கிளம்பிய ஒமைக்ரான் பல நாடுகளில் பரவி வருகிறது.டெல்டாவை விட நான்கு மடங்கு வேகமாக பரவும். இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.

* நோய் பாதிக்கப்பட்ட முதியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஒரு லட்சம் நோயாளிகளில் 1500 பேர் கடுமையாக பாதிக்கப்படலாம்.

* காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு, உடல் வலி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகவும். தவறினால் ஆபத்து ஏற்படும்.

* முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால்,நோயாளிகளை காப்பது சவாலாகும்.

பாதிப்பு குறைவு

* ஒமைக்ரான் வீரியம் குறைந்தது. ஆக்சிஜன் வென்டிலேட்டர் தேவை இருக்காது. இறப்பு குறைவு. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு பாதிப்பு குறைவு.
* ஒமைக்ரான் நுரையீரலை அதிகம் தாக்காது. இதனை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவை.

தடுப்பூசி ஆயுதம்

* மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், முழு ஊரடங்கு அவசியமில்லை. சுயகட்டுப்பாடு போதும்.

* காற்றின் மூலம் வைரஸ் பரவுவதால், கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

* அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

* சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம்.

* முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ளவேண்டும்.

* இரண்டு ஆண்டுகளாக கொரோனா அனுபவம் நமக்கு உண்டு. விஞ்ஞான பூர்வமான முறையில் பொறுப்பாக நடந்து கொண்டால், ஒமைக்ரானை வெல்வது எளிது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES