கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி முதல், ஆன்லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்தபடி விடை எழுதி, விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வில், மாணவர் அல்லாமல், வேறு யாராவது விடைகளை எழுதி, ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்க கல்லுாரிகள் திட்டமிட்டு உள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டின்போது, மாணவர்களின் எழுத்துகளில் சந்தேகம் எழுந்தால், அந்த விடைத்தாள்களைத் தனியாக எடுத்து வைத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் முந்தைய விடைத் தாள் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்தபடி விடை எழுதி, விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வில், மாணவர் அல்லாமல், வேறு யாராவது விடைகளை எழுதி, ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்க கல்லுாரிகள் திட்டமிட்டு உள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டின்போது, மாணவர்களின் எழுத்துகளில் சந்தேகம் எழுந்தால், அந்த விடைத்தாள்களைத் தனியாக எடுத்து வைத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் முந்தைய விடைத் தாள் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மாணவர்களின் செய்முறை ஏடுகள் உள்ளிட்ட நோட்டுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என, பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE