Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 December 2021

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு - அரசாணை வெளியீட

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் 7.9.2021 அன்று, ‘’சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்’ என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.அதை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES