Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 November 2021

நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் தள்ளிப் போகக் கூடுமா என்பது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு முலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பாண்டு 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப் போக வாய்ப்பில்லை தற்போது திருப்புதல் தேர்வு நடத்த தீவிர ஏற்பாடு, பாடத்திட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

 சேப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

இந்த இடத்தில் தங்களது பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யாரும் எண்ணக் கூடாது. பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் இதற்கான பலன்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 2.87 லட்சம் வகுப்பறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்து

புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் 1098, 14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இந்த உதவி எண்கள் அச்சடிக்கப்படும். தற்போதைக்கு மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் ஸ்டாம்ப் மூலம் இலவச உதவி எண்கள் இடம்பெறச் செய்யப்படும் என்றார். கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள மாணவர்களின்

கற்றல் குறைபாட்டை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி திட்டம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். இதற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நடப்பு கல்வியாண்டு இறுதியில் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக பாடத்திட்டம் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தள்ளிப் போக வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.

எனவே வழக்கம் போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான பாடத்திட்டங்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES