Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 November 2021

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதிய சிக்கல்; தமிழக அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ்!


பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்கும் அரசாணை அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டில் நடந்த கும்பகோணம் பள்ளி தீவிபத்து பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது. அதன் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. கும்பகோணம் சம்பவத்திற்கு பின்னர் தமிழகத்தில் எந்தவொரு தனியார் பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை, பேருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான அரசாணையில் தொடர் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் 1994ஆம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு, மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்ட பிரிவுகளிலும்,

மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அங்கீகாரம் என்பது நிரந்தரமானது. சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது. பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் என்பது நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனியர் அமைச்சர்கள் மேல் ஸ்டாலின் அப்சட் ; பின்னணி என்ன ?
எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES