Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2021

ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு கல்லூாி மாணவர்களுக்கு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன.

ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர். ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது. மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளும் தொடங்கிவிட்டன.

இதனிடையே, நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் மூலமே தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், உயர்கல்வித் துறை கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் என உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதை அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக துறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது.

இந்த நிலையில், செமஸ்டர் தேர்வு ஆஃப்லைன் முறையிலேயே அதாவது நேரடியாகவே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், “நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படும். ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்” என்றார்.

மேலும், அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைத்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்றார்.





பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு


"போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும்"



ஜனவரி 20-க்குப் பிறகு கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும். ஆன்லைன் தேர்வு கோரி போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும். - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES