Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 November 2021

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு; தமிழக அரசின் ஜாக்பாட்!


முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு மாணவர்களின் எண்ணிக்கை 1,200ல் இருந்து 1,600ஆக அதிகரிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறலாம்

தமிழகத்தின் மூத்த குடிமக்களாக பழங்குடியின சமூகத்தினர் கருதப்படுகின்றனர். இவர்களின் வாழ்வு மேம்பட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில், முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இன மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8.00 லட்சமாக உயர்த்தியும் மாணவர்களின் எண்ணிக்கை 1,200ல் இருந்து 1,600ஆக உயர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகை ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அரசாணை எண் 96, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 25.11.2021ல் ஆணை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு 2021-22ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத்தொகை திட்டத்தில் 1,124 பேர் பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட, பழங்குடியின சமூகத்தினருக்கான நலத்திட்ட உதவிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படமும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பார்த்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் ஒரு பார்வையாளர் மனதில் ஏற்படும் தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது.

இருளர் குறித்து படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் அருகேவுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். மேலும் சாதி சான்று, வேலைவாய்ப்பு பயிற்சி ஆணை உள்ளிட்டவையும் அளித்தார். மொத்தம் ரூ.4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இத்தகைய செயல்பாடுகளால் உண்மையான ஜெய்பீம் முதல்வர் ஸ்டாலின் தான் என்று பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES