Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 October 2021

வேலை நிறுத்தக் காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு ஆணை


ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 2016, 2017 & 2019 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் ஈடுபட்ட போராட்ட காலங்களை முறைப்படுத்தி தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண் 113 நாள் 13.10.2021 வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

* வேலைநிறுத்தம் :*


10.02.2016 - 19.02.2016


JACTTO-GEO வேலைநிறுத்த காலங்கள் :

22.08.2017

07.09.2017 - 15.09.2017

22.01.2019 - 30.01.2019


உள்ளிட்ட போராட்ட காலங்கள் முழுமையாக பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டு,


மேற்படி போராட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட தற்காலிக பணி நீக்கம், குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் இரத்து செய்வதோடு,


பணியிட மாறுதல் செய்யப்பட்டோரை மீண்டும் அதே பணியிடத்தில் பணியமர்த்திட கலந்தாய்வின் போது முன்னுரிமை வழங்கிடவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2017 போராட்ட காலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை விடுமுறை நாள்களில் ஈடு செய் பணி மேற்கொள்ளப்பட்டதால் அப்போது ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை.


தற்போது அக்காலத்தையும் முறைப்படுத்துவதால் அக்காலத்திற்கு மீண்டும் ஊதியம் பெற்று வழங்க வேண்டிய நிலை ஏற்படாது .....

என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளதால் மற்ற முறைப்படுத்தல் காலங்களுக்கு வழங்கப்படாத ஊதியமும் வழங்கப்பட வேண்டுமென்பது அரசாணையின் வழி தெளிவாகிறது.













No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES