Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 September 2021

விவேகானந்தரின் பொன்மொழிகள்


🚩🚩🚩🚩🚩🚩🚩🚩


* உன் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அவர்களின் நட்பில் இருந்து சிறிது காலம் விலகியிரு.

* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

* விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்காக அல்ல.

* முடியாது என்று நீ சொல்வதை யெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்.

* மனிதனுக்குள் ஏற்கனவே மறைந் திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

* உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.

* நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்திஅற்றது ஆகிவிடும்.

* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

* மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்


* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

* உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன


.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES