Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 August 2021

தமிழகத்தில் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி: சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தமிழகத்தில் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செம்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளி வகுப்பு திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணியாளர்கள் மூலம் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. இதுதவிர பள்ளி பதிவேடுகள், பராமரிப்பு அறை உள்ளிட்டவைகள் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

👉 வரும் செப்டம்பர் 1" ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

👉 பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் வருகிற 31"ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

👉 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் விவரங்களை வரும் 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

👉 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு REFERSHING COURSE மட்டும் நடத்தப் பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
source



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES