Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 July 2021

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியீடு

🔵⚪️
இன்று  காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை

முடிவுகளை அறிய கீழே 
கிளிக்செய்யவும் 

இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம்

மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரங்கள் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும்

இணையதளங்கள் மூலம் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து
 மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .

www.tnresults.nic.in






22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசாணை ( நிலை ) எண் .105 பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் .12.07.2021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் ,


1. www.tnresults.nic.in

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

4. www.dge.tn.gov.in

மாணவர்கள் , பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.





மேலும் , பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in , www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




8 லட்சத்து 6 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகளுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நாளைமறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு ரத்து கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த கல்வியாண்டு முடிந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கடந்த கல்வியாண்டில் (2020-21) மாணவ-மாணவிகளின் நலன் கருதி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது.இதில் பிளஸ்-2 மதிப்பெண் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால், அந்த பொதுத் தேர்வுக்கு மட்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவு இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்ட போது, ‘பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் இருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் சொல்லும் நாளில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும்' தெரிவித்தார். இந்தநிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதிலும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு குறித்து பேசப்பட்டது.இதையடுத்து நேற்று மாலையில் அரசு தேர்வுகள் இயக்ககம், பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாளை மறுதினம் வெளியீடு பள்ளிக்கல்வி துறையின் ஆணையின்படி, 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பள்ளி மாணவர்கள்

www.tnresults.nic.in,


www.dge1.tn.nic.in,


www.dge2.tn.nic.in,


www.dge.tn.gov.in

என்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES