Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 June 2021

தங்க நகை கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம்

விவசாயத்திற்காக வாங்கப்பட்ட, தங்க நகை கடன்களுக்கான வட்டியில், 3 சதவீதத்தை மானியமாக வழங்க, அனைத்து வங்கிகளுக்கும், நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளில் விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதில், முறையாக திரும்ப செலுத்து வோருக்கு, 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும்.விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில், 5 சதவீதத்திற்கான வட்டி தொகையை, வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும். ஆனால், 2019 பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.இதனால், விவசாய நகை கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம், 2019 முதல் நிறுத்தப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.

இதனால், மார்ச் 1 முதல், ஜூன் 30 வரையிலான தேதிகளில், நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில், 3 சதவீதத்தை மானியமாக வழங்க, நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இதனால், நகை கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 3 சதவீத வட்டி தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES