Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 May 2021

தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட மனு

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வேண்டும்' என, அமைச்சர் ஜெயகுமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். மனுவில், ஜெயகுமார் கூறியிருப்பதாவது:

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், தபால் ஓட்டு எண்ணிக்கையை முடித்து, முடிவுகளை வெளியிட வேண்டும் என, தி.மு.க., மனு அளித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, தேர்தல் கமிஷன் தெளிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது; அதை மீறக்கூடாது. தபால் ஓட்டு எண்ணிக்கையை முதலில் துவக்க வேண்டும்.

அடுத்த அரை மணி நேரத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும்.தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மாற்றவோ, மீறவோ வேண்டியதில்லை. விதிமுறைகளின்படி ஓட்டு எண்ணிக்கையை நடத்த வேண்டும். 

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான, ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிடும் முன், தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டும் என்ற தேவையில்லை. இரண்டு எண்ணிக்கை முடிவுகளையும், விதிமுறைகளின்படி வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES