Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 May 2021

ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் காணிக்கையாக செலுத்திய பெண்



மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் பரபரப்பு


மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவிலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் மே 7 ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் 50 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டி கொண்டார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES