Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 May 2021

28 அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது


2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் சில கடினமான முடிவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 


அதில் ஒன்று அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முழு அகவிலைப்படி நிலுவைப் பணம் அனைத்தும் கிடைக்கும் என்று நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும், 65 லட்சம் பென்சனர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படியின் முழுப் பயனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. 

தற்போதைய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக இருக்கிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 4 சதவீத உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2021 ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 28 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES