Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 April 2021

நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா காரணமாக நாளைமுதல் தமிழக வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது

. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அசாதாரன சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்றும், ஞாயிற்று கிழமைக்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி கணப்படுகிறன்றன. இந்த உத்தரவு நாளை காலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாளைமுதல் தமிழக வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. நாளை முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளின் விதிமுறைகளின் படி நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், வங்கிகள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES