Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 March 2021

பிஇ -பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயற்பியலும் கணிதமும் கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு



PLAY

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிஇ மற்றும் பி டெக் பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE அறிவித்துள்ளது.

தற்போது உள்ள நடைமுறைப்படி இவை கட்டாயமாக உள்ளன.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், இயற்பியல், கணக்கு, கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் தான் அனைத்து பொறியியல் பட்டப்படிப்புக்கும் அடித்தளம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

தற்போது நடைமுறையில் பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமாக உள்ளன. இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிதாக வரையறுத்துள்ளது. அதில் கணிதம், இயற்பியல், வேதியியில் பாடங்களை படிக்காதவர்களும் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 2021- 2022-ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி என 12 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பில் இதில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்பில் சேரலாம்.

பொறியியல் படிப்புக்கு அடிப்படையான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை 12-ம் வகுப்பில் பயிலாதவர்கள், பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு அவற்றை, இணைப்பு பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழலில், இத்தகைய அறிவிப்பால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்பு 4 ஆண்டுகளாக இருக்கும் சூழலில், ஓராண்டு, ஈராண்டிலேயே படிப்பை விட்டு நின்றால், புதிய கல்விக்கொள்கையின் படி திறன் சான்றிதழ் தரப்படும் என்றும் இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES