Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 February 2021

அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை கைவிடல்: அரசாணை வெளியீடு



சென்னை:தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அவற்றின் மீதான மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜன.21ல் சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பங்கேற்ற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுவதாக பிப். 1ல் முதல்வர் அறிவித்தார்.அதை நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES