Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 January 2021

டிஎஸ்பி ஆன மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் -நெகிழ்ச்சியான தருணம்



ஆந்திராவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை, தன்னைவிட உயர் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை

ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார்.


இந்நிலையில் சமீபத்தில் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது அவரது வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக ஷியாம் சுந்தர் கூறுகையில், ‘எனக்கு இது பெருமையான விஷயம். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம். பணியின்போது மகள் எனது உயர் அதிகாரி’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES