Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 January 2021

ஆசிரியர் தேர்வு 2021 அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

ஆசிரியர் தேர்வு:
கடந்த, 2013, 2017ல் நடந்த டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடம் நிரப்பப்படும். கூடுதல் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப்பின், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்



கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள். இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

அதுபோல, அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விபரம் பெறப்பட்டு, தேவையான பணியாளர் நியமிக்கப்படுவர். மத்திய அரசு, 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அந்நிதியில், அரசு மாணவியர் பள்ளிகளில் கூடுதலாக தலா ஒரு யூனிட் அளவில் கழிப்பறை கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES