Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 December 2020

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்




அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைப் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

50 விழுக்காடு பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் பாடங்கள் நடத்தப்பட்டதோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தான் வினாக்கள் இடம்பெறும் என்றும், தேர்வுக் கால அட்டவணை இரண்டு மூன்றுநாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, அது மத்திய அரசின் நிலைப்பாடு, என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு அதுவல்ல என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES