Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 December 2020

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:






டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 2 வாரமாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்க கடலில் நிலவிய நிவர், புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தின் வட, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. வங்கக்கடலில் உருவான புரெவி புயலானது மன்னார் வளைகுடா பகுதியிலே கடந்த 3 நாட்களாக நிலைகொண்டு தொடர்ச்சியாக வலுவிழந்து வருகிறது. இன்று காலை மேலும் வலுவிழந்து வளிமண்டல சுயற்சியாக அதேபகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக இன்றைய தினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES