Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 November 2020

தமிழகத்தில் இன்றைய 28/11/2020 கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர், இறப்பு, முழு நிலவரம்

தமிழகத்தில் இன்று 1,430 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 393 பேர் பாதிப்பு: 1,453 பேர் குணமடைந்தனர்


\


புதிதாக 1,430 பேருக்கு கொரோனா.. மேலும் 1,453 பேர் டிஸ்சார்ஜ்.. 13 பேர் பலி..!

கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,694 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 579 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,430 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில், சென்னையில் 393, கோவையில் 142, திருவள்ளூரில் 80, செங்கல்பட்டில் 78, காஞ்சியில் 70, சேலத்தில் 67, திருப்பூரில் 65 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

ஆகையால் மொத்தமாக இதுகாறும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 56 ஆயிரத்து 279 ஆக உள்ளது. இருப்பினும் கொரோனாவால் மேலும் 13 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து தற்போது 11 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES