Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2020

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா


சென்னை: தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் கண்டறியப்பட்டுள்ளது; 17 மாவட்டங்களில் 20க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள 212 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் 67 ஆயிரத்து 14 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டு 1714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் எட்டு மாவட்டங்களில் ஒற்றை இலக்குகளில் தொற்று பாதிப்பு உள்ளது. இவற்றுடன் 17 மாவட்டங்களில் 20க்கு கீழ் தொற்று பதிவாகி உள்ளது.






மார்ச் முதல் நேற்று வரை 1.12 கோடி மாதிரிகள் பரிசோதனையில் ஏழு லட்சத்து 63 ஆயிரத்து 282 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று மட்டும் 2311 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து ஏழு லட்சத்து 37 ஆயிரத்து 281 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.



இதுவரை 11 ஆயிரத்து 531 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3788 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES