Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் -தமிழக அரசு திட்டவட்டம் முழு விவரம் உள்ளே




தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.







பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம்-தமிழக அரசு 


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 


தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தற்போது தான் கட்டுக்குள் இருக்கிறது, அடுத்து எப்போது வேண்டுமானாலும் கொரோனா இரண்டாம் அலை வீசும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை திறக்காமல் இருக்கிறோம்.


பள்ளிகளைத் திறக்க மேலும் காலதாமதம் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES