Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 November 2020

நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! இம்மாநில முதல்வர் அறிவிப்பு!




மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவலானது இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய நிலையில் பல மாநிலங்கள் பொது தேர்வை ரத்து செய்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பல மாநில அரசானது தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்றின் தாக்கம் முழுமையாக குறைய தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நடப்பாண்டு பள்ளிகளே திறக்காத நிலையில் தேர்வுகள் நடைபெறுமா என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவிவந்தது. அதேபோல் எவ்வாறு பள்ளிகளை திறப்பது, பள்ளி, கல்லூரிகளை திறந்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ என அரசும் குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் பயிலக்கூடிய 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் குறையாத நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES