Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 October 2020

ஏழு புதிய கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் உட்பட, 210 பேரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி

ஏழு புதிய கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் உட்பட, 210 பேரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், ஏழு புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; 
கரூர் மாவட்டம், தரகம்பட்டி; 
விழுப்புரம் மாவட்டம், வானுார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார்; 
நாகை மாவட்டம், குத்தாலம்;
 ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் 

ஆகிய இடங்களில், இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும், கோவை, புலியகுளத்தில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்லுாரிகளில், நடப்பாண்டில் மாணவர்களை சேர்த்து, பாடங்கள் நடத்துவதற்காக, ஒவ்வொரு கல்லுாரிக்கும் தலா, 17 உதவி பேராசிரியர்கள் மற்றும், 13 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அரசாணையை, தமிழக உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES